book

மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும்

Madurai Kalambagam Moolamum Uraiyum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

கலம்பக இலக்கிய வரிசையில் பக்திமரபான கலம்பகங்ளுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது மதுரைக் கலம்பகம். இந்நூல் குமரகுருபரரால் அருளிச் செய்யப்பட்டது. கடவுள் வாழ்த்து நீங்கலாக நூற்று இரண்டு பாடல்களையும், ஆசிரியர் சிறப்புப்பாயிரம் என்னும் பாடலையும் கொண்டிலங்குகிறது. மதுரைக் கலம்பகம் என்னும் பெயர் மதுரையினது கலம்பகம் என விரித்துநின்று பொருள்தருகிறது. குலசேகரன் என்னும் பாண்டிய மன்னன் காட்டை அழித்து நகரத்தை உருவாக்க முனைந்த பூசனை செய்தபோது சோமசுந்தரக் கடவுளாகிய சிவபெருமான் தன் சடைமுடிவில் வீற்றிருக்கும் சந்திரனில் இருந்து அமுதத்தைப் பெருகச்செய்து பெய்விக்க அவ்வமுதமானது நகர் முழுதும் பரவி மதுரமயமாகியது. மதுரை என்னும் பெயரையும் பெற்றது. மீனாட்சி அம்பிகையுடன் எழுந்தருளி மதுரையில் அருள்வழங்கும் சிவபெருமானின் அருந்தன்மைகளை விரிவான களத்தில் இந்நூல் பெசுகிறது.