book

மெளனத்தின் வெற்றி

₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜானகி மணாளன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விசயங்களை ஒரு மெளனம் சொல்லிவிடும். மெளனம் ஒரு மகத்தான சக்தி. மெளனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள் அதை தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எதை எப்போது எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்தான், ஆனால் அதைவிட அவசியம் எப்போது பேசாமல் மெளனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது. ஒரு விசயத்தை சொல்வது கலை என்றால் ஒரு விசயத்தை சொல்லாமல் சொல்வது அதைவிட நுணுக்கமான கலை, மெளனத்தை பேச வைக்கிற கலை அது. சொல்லாமல் சொல்லும் கலை என்கின்றனர் சான்றோர். இக் கலையில் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தார் கவியரசு கண்ணதாசன் , அவர் ஒரிடத்தில் எழுதுகிறார் என் தந்தைக்கு மது, மங்கை, மாமிசம் முதலிய எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ஆனால் நிறைய சீட்டாடுவார், நான் சீட்டு மட்டும் ஆடமாட்டேன் என்றார், இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவர் சொல்லாமலே நமக்கு புரிகிறதல்லவா?