book

நட்பெனும் நந்தவனம்

₹420+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :448
பதிப்பு :2
Published on :2020
Out of Stock
Add to Alert List

'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் 'என்பது எனது முனைவர் பட்ட தலைப்பு. 2005-ல் நான் இந்த தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அய்யா அவர்களை நெறியாளராகக் கொண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சி ஆரம்பித்தபோது 16 நூல்கள் திரு.இறையன்பு அவர்களால் எழுதப்பட்டிருந்தது. இன்று நூற்றுக்கு அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கின்றார். இப்போது வரும் அவரின் ஒவ்வொரு புத்தகமும்,ஒரு முனைவர் பட்டம் பெற உதவிடும் வகையில் வருவது வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அண்மையில் அவர் எழுதியுள்ள 'நட்பெனும் நந்தவனம் ' என்னும் புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் மிக அருமையாக அமைந்தது. 

                      உறவினர்களை விட நண்பர்களே வாழ்க்கையில் மிக நெருக்கமாக இருக்கிறார்கள், நெருக்கடிகளில் உதவுகிறார்கள்,உண்மையாக இருக்கிறார்கள்..நட்பின் மேன்மை தெரிகின்றது, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் வேண்டும் என எண்ணுகின்றோம்.தீய நண்பர்களை வாழ்க்கையிலிருந்து விலக்கிவிட வேண்டும் என எண்ணுகின்றோம்.யார் நல்ல நண்பர்கள்..எப்படி கண்டுகொள்வது, நல்ல நண்பர்களை உளவியல் ரீதியாக எப்படி கண்டுகொள்வது?,நல்ல நண்பர்களை சங்க  இலக்கியங்களின் வழியாக எப்படி கண்டுகொள்வது? நல்ல நண்பர்களை திருக்குறளின் வழியாக எப்படி கண்டுகொள்வது ? நல்ல நண்பர்களை மேல் நாட்டு இலக்கியங்கள் வழியாக எப்படி கண்டுகொள்வது ?நல்ல நண்பர்களை நூல் ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தால் எப்படி கண்டுகொண்டார் என்பதையெல்லாம் இணைத்து ஒரு அற்புதமான நட்பியல் பெட்டகமாக வந்திருக்கும் புத்தகம்தான் 'நட்பெனும் நந்தவனம் '.