book

மனமெல்லாம் மகிழ்ச்சி

Manamellam Magizhchi

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

முதல் பரிசு
முதல் பேணா
முதல் காதல்
முதல் முத்தம்
இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.

Live this moment என்பார்கள். அதற்கான சரியான எடுத்துக் காட்டுகள் தான் இவை. அந்த நொடி மகிழ்ச்சியை நாம் திரும்ப திரும்ப நினைத்து மகிழ்ந்தாலும் அந்த நொடி கடந்த நொடிகள் தான்.

“மனம்” அது மகிழ்ந்தால் வாழ்க்கையில் வளம் பின் தொடரும். ஆகவே நம் மனமே மாமருந்து. நம் மனமே நமது பொக்கிஷம். அதை மகிழ்வோடு வைத்து கொள்வதின் வழியே நாமும் மகிழ்ச்சியாக வாழலாம்.

மகிழ்ச்சியை நுகரப் புலன்கள் கண், காது மூக்கு பூட்டாக இருக்க மனம் சாவியாக இருக்கிறது என்று ஆசிரியரின் பார்வை நம்முள் ஊடுருவ தவறவில்லை. ஆம் மனம் என்னும் சாவி கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும்.

மனமே மகிழ்ச்சியின் அளவுகோலை நிர்ணயிக்கிறது. அதனால் தான் சில புலன்கள் இல்லாதவர்கள் பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வருகிறது. மனமே முக்கிய பங்கு வகிக்கிறது.