அன்புள்ள மாணவனே
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184468717
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Out of StockAdd to Alert List
மாணவச் செல்வங்களுக்கு வெ.இறையன்பு எழுதியிருக்கும் 30 கடிதங்களின் தொகுப்பே இந்நூல். ‘மடல்’ என்றே இக்கடிதங்களைக் குறிப்பிட்டு, ஓர் அடையாளத்தைப் பதிவுசெய்கிறார். ‘இவை அறிவுரையில்லை; உன்னை உயர்த்திக்கொள்ள உனக்கு உதவும் எனது எளிய ஆலோசனை’ என்கிற அடையாளம்தான் அது. பாடப் புத்தகங்களுக்குள் தங்கள் எதிர்காலத்தைத் தோண்டி எடுக்கும் புதையல் வேட்டைக்காரர்களாகக் கல்விக்கூடங்கள் மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்நாட் களில், இப்புத்தகத்தின் தேவை அதிகம். மாணவனைப் பார்த்து ‘தோழனே... உன் பெற்றோருக்கும் உண்மையாய் இரு. அதுவே சிறந்த ஒழுக்கம். அதுவே மேன்மை தரும் தூய்மை. அது உன்னை எப்போதும் மகிழ்ச்சி வளையத்துக்கு மையமாக வைத்திருக்கும்’ என்று ஒரு மடலில் எழுதிச் செல்கிறார். ‘பூக்களைப் பறிக்காமல் நேசி, பட்டாம்பூச்சிகளைப் பிடிக்காமல் ரசி. விண்ணில் பறவைகள் பறந்து செல்வதை அமைதியாகப் பார். கொக்கு கள் எப்போதும் ஒரே வடிவத்தில் இடம்பெயர்வதைப் பார். பல அரிய காட்சிகளை வாழ்வின் அழுத்தத்தின் காரணமாக நாம் தொலைத்துவிடுகிறோம்’ என்று மாணவர் உள்ளத்தில் மெல்லுணர்வு தீபத்தை ஏற்றுகிறார்.