book

மழை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123436609
Out of Stock
Add to Alert List

மழை பயிர்க்குலம் தழைக்கவும், அதனால் மனித குலம் தழைக்கவும் உதவும் உன்னத அமிழ்தம் ஆகும். அமுதம் என்பது உயிர் வளர்க்க கூடிய ஒன்று. மழையும் உயிர்களை காக்கும் ஒன்று. அதனால் தான் மழையை அமிழ்தம் என திருவள்ளுவர் குறிப்பிட்டார்.
'வானின் றுலகம் வழங்கி வருவதால்தானமிழ்தம் என்றுணரர் பாற்று'என்கிறது திருக்குறள்.
மழையை, அமிழ்தம் என்று அவர் சொல்ல இன்னொரு காரணமும் உண்டு. உண்பதற்கு ஆன உணவுப் பொருட்கள் விளைய, மழை காரணமாகிறது.
'துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய துாவும் மழை'
என்ற திருக்குறள், மழையின்
பெருமையை பறை சாற்றுகிறது. வான் சிறப்பு என திருவள்ளுவர் இந்த அதிகாரத்திற்கு பெயரிட்டிருக்கிறார். மனித குலம்
சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், வான் மழை சிறப்பாக இருக்க வேண்டும்.
'மாமழை போற்றதும்
மாமழை போற்றதும்
நாம நீர் உலகிற் கவனளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான்'
என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மழையின் சிறப்பை உணர்த்தியிருப்பார். சோழனின் கொடை தன்மை போல், மழை வானின்றும் சுரக்கிறது என்று மன்னனையும், மழையையும் போற்றுவார். இரண்டு பேருமே மக்களையும்,
மண்ணையும் காப்பவர்கள் என்று இதன் உள்ளீடாக உணர்த்தப்பட்டிருக்கிறது.
இப்படி பொழியும் மழை நீரை வாய்க்காலாய், மதகுகளாய், குளங்களாய், ஊருணிகளாய் நம் முன்னோர்கள் தேக்கி வைத்தனர்.
மழையும், மன்னர்களும்
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று திருத்
தல சிறப்பை சொல்லும் போது, தீர்த்தம் என்பது நீரின் குறியீடாக தெப்பக்குள சிறப்பாக எடுத்து காட்டப்படுகிறது. ஊரைச் சுற்றி குளங்கள், கண்மாய்கள் இருக்கும் போது, அங்கே நிலத்தடி நீர் பெருகுகிறது. ஊற்று வற்றாமல் சுரக்கிறது. கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்கப்படுகிறது. இவை எல்லாம் நீரின் அருமையை உணர்ந்த நம் முன்னோர்கள் நெறிமுறைகளில் ஒன்று.
நம் மன்னர்களில் பெரும்பாலானோர்
நீர் காக்கும் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். நீர் காக்கும் பெருமுயற்சியின் பிதா மகனாக மாமன்னர் கரிகாற் பெருவளத்தான் திகழ்ந்திருக்கிறான். அவன்
கட்டிய கல்லணை கம்பீரத்தின் காட்சியாக நீர் தேக்கும் சாட்சியாக இன்று விளங்குகிறது.
கரிகாலனை தொடர்ந்து பிற்காலச் சோழர்களில் ராஜ ராஜ சோழனும்,
ராஜேந்திர சோழனும் அமைத்த நீர்தேக்கங்கள் இன்றளவும் வரலாற்றின் அழியாத பக்கங்களாக ஆராதிக்கப்படுகிறது.
நீர்சக்தி
வீர நாராயணன் ஏரி என்ற வீராணம் ஏரி, பொன்னேரி, சோழகங்க ஏரி, மதுராந்தகம் ஏரி என இதை விரித்து கொண்டே போகலாம். ஒரு நாட்டின் வளமையை நிர்ணயிப்பது அந்த நாட்டிலுள்ள நீர்சக்தி என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நீர்ச்சத்து குறைந்தால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
நீர்ச்சத்து குறைந்தால் பஞ்சம், பசி,
பட்டினி, வறுமை, பிணி, வழிப்பறி, தேச துரோகம் என எல்லாம் தலை விரித்தாடும். அது ஒரு தேசத்தை பிடித்த நோயாகும் என்பது அவர்களின் கணிப்பு. நீர் காக்கும் முயற்சியிலும், நீர்த்தேக்கும் முயற்சியிலும் எல்லா மன்னர்களும் ஈடுபட்டிருந்தனர்.
மன்னர் அமைத்த குளம்
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர், நகரை சுற்றி அமைத்த குளங்களும், ஏரிகளும், தெப்பக்குளங்களும், அதற்கு திலகம் வைத்தது போல மதுரையின் கிழக்கே உலகம் போற்றும் மாரியம்மன் தெப்பக்குளத்தை அவர் அமைத்த பாங்கும், வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.