book

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவதர்ஷினி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :632
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184027495
Add to Cart

இந்தியாவின் பாரம்பரிய குரு – சிஷ்ய பரம்பரை, இந்த விஞ்ஞான உலகிலும் அழிந்து போய்விடவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம், இந்த நூலின் ஆசிரியரான ஜஸ்டின் ஓ பிரையனும், அவரது குருவான சுவாமி ராமாவும். சுவாமி ராமா, வட இந்தியாவில் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்தே, ‘பெங்காலி பாபா’ என்று அழைக்கப்பட்ட இமயத்து யோகியால் வளர்த்து ஆளாக்கப்பட்டவர்.
தன் ஆசானின் வழிகாட்டலில், பல மடாலயங்களுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு முனிவர்களையும், யோகிகளையும், திபெத்தின் தொலைதூரப் பகுதியில் வசித்த பரமகுருவையும் சந்தித்து, அவர்களிடம் பயின்றவர். சுவாமி ராமா, தீவிரமான ஆன்மிகப் பயிற்சியோடு இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் உயர்கல்வி கற்றவர். 1969ல் அமெரிக்கா சென்று ‘இமாலய கழகம்’ என்ற அமைப்பை நிறுவினார். இந்த கழகம், இந்த நூலின் ஆசிரியரான, ஜஸ்டின் ஓ பிரையன், சிகாகோவில் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்று, அங்குள்ள லயோலா பல்கலைக்கழகத்தில், இறையியல் கற்பிக்கும் பேராசிரியர். இவருக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே, ஆன்மிக தேடலில் இயல்பாகவே நாட்டம் இருந்திருக்கிறது. ஆறு வயது ஆவதற்குள்ளாகவே மூன்று முறை வீட்டை விட்டு, ‘உலகை ஆராய்ந்து அறிய வேண்டும்’ என்ற ஆவலில் ஓடியிருக்கிறார். பின், வீட்டிற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்.