book

சங்க இலக்கியம் நற்றினை மூலமும் உரையும்

Sanga Ilakkiyam Natrinai Moolamum Urium

₹365+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்பிரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :528
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

இந்நூலில் உள்ள பாடல்களைப் பாடியவர்களுள் பெயர் தெரிந்த புலவர்கள் 189 ஆவர். பாடியவர் பெயர் தெரியாத பாடல்கள் 57 உள்ளன. இப்பாடல்கள், வாழ்க்கையிலும் காதல் நெறியிலும் ஒழுக்க நெறியைச் சாற்றும் தன்மையன. அவற்றுள் ஒருசில வருமாறு. தலைவனின் மார்பானது, ஆகாயம் நெருப்பையும் காற்றையும் ஒருங்கே பெற்றுள்ளதைப் போன்று தலைவிக்கு இன்பமும் துன்பமும் ஆயிற்று என்று பாடல் எண் 294 இல் சாற்றி இல்லறத்தில் காணப்பெறும் இன்ப துன்ப நிலைகளை எடுத்துக்காட்டுவதாகும். மற்றும் இதே பாடலில் புலியைக் கொன்ற இரத்தச் சிவப்பேறிய யானையின் கொம்புகள் காந்தள் மலர் அரும்புக்கு உவமை சாற்றியமையும் நோக்கத்தக்கது.