book

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்

Flawrance Nightingale

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188188048838
குறிச்சொற்கள் :பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மிகச்சிறப்பான முறையில் படைத்துள்ளார். கைவிளக்கேந்திய காரிகை; தீபம் எந்திய சீமாட்டி என்று உலகமக்களால் இன்றும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், '' விளையும் பயிர் முளையிலே தெரியும்'' இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்ற மனப்பான்மை உடையவ்வாய் இருந்தார்.

முற்காலத்திற்குரிய பணியாக இருந்தும் ஃப்ளாரன்ஸ் அப்பணியை விரும்பி ஏற்றுக் கொண்டார். போர்காலத்தில் மருத்துவ முகாமில் பணிபுரிந்து வந்த செவிலியர்களுக்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருக்க, ஃப்ளாரன்ஸே பொருத்தமானவர் என்று இங்கிலாந்து அரசால் தேர்ந்தேடுக்கப்பட்டார். அவரது ஆர்வமும் தன்னலமற்ற சேவையுமே அவருக்கு அப்பொறுப்பு கிடைக்கக் காரணமாயிருந்தது என்பதை அறியும்போது நமக்கு வியப்பு மிகுகின்றது.

கடவுள் இட்ட பணியைத் தான் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டாலும் அவர் மனப்பூர்வமாக விரும்பி, தியாகவுணர்வுடன் செவிலியர் பணியை ஏற்றுக் கொண்டதால் அவருக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தன என்றும் மருத்துவமனை வடிவமைப்பு, செவிலியர் நிலை உயர்வு, சிகிச்சை பெறுவோர்களுக்குச் செய்ய வேண்டிய வசதிகள் பற்றியே எப்போதும் அவரது சிந்தனையில் இருந்ததாக இந்நூலால் அறிந்துகொள்ள முடிகின்றது.