book

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :173
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430478
Add to Cart

 முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாக குறைநுகர்வே என்று பல பொருளாதார அறிஞர்கள் கூறிவருகின்றனர். இதில் என்ன கொடுமை என்றால் இப்படிச் சொல்பவர்களில் சிலர் மார்க்சிய பொருளாதார அறிஞராக அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர். தோழர் த,ஜீவானந்தம் 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடிக்குக் மிகை உற்பத்தியே காரணம் என்று மார்க்சிய முதலாசிரியர்களின் வழியில் விளக்கியிருக்கிறார். முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத உள்முரணின் வெளிப்பாடே பொருளாதார நெருக்கடி, வளர்ச்சியடைந்த சமூகவழிப்பட்ட உற்பத்திக்கு, தனிச்சொத்துடைமையாக்கான உற்பத்தி உறவுகள் பொருத்தமற்று போவதையும், அதன் தொடர்ச்சியாக சமூக புரட்சி ஏற்படுவதையும் மார்க்ஸ் தெளிவுபட விவரித்துள்ளார். இந்த விளக்கத்தில் காணப்படும் முரணை தவிர்க்க முடியுமா!! என்ற முயற்சியில் முதலாளித்துவ அறிஞர்கள் மார்க்சின் "மூலதன" நூலை படித்தாராய்கின்றனர். சமூகத்தை மாற்றுவதற்கு போராடுகின்ற கம்யூனிஸ்டுகளில் பலர் இதன் அவசியத்தை பற்றிய போதிய அறிவு பெறாமையினால், முதலாளித்துவ எதிர்ப்பு, புதிய சமூக மாற்றம் என்ற சொல்லோடு மார்க்சியத்தை சுருக்கி புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர்.