book

சமுதாயமும் பண்பாடும்

Samuthayamum Panpaadum

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422947
Add to Cart

மனிதன் தன்னுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு என சி. சி. நார்த் (C.C. North) குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சமுதாயத்தின் அல்லது ஒருநாட்டின் பண்பாடு, காலச்சூழலுக்கேற்ப வளரும் தன்மை கொண்டது. இவ்வளர்ச்சிப் பாதையில், பயன்படக்கூடிய, ஒப்புக் கொள்ளப்பட்ட விரும்பத்தக்க, சமுதாயத்திற்கேற்ற, தேவையான கூறுகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மற்றவைகள் காலப்போக்கில் விலக்கப்பட்டுவிடும். பண்பாடு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட காலத்தின் வேலையாக மட்டுமன்றிப் பன்னெடுநாளைய வளர்ச்சியைக் கொண்ட ஒன்றிணைந்த திரட்டாக வளர்ந்த வண்ணமுள்ளது எனலாம். பல்வேறு காலக்கட்டங்களில் ஒருபூபாகத்தில் மனித இனம் கண்ட அனுபவங்கள், அதற்கு அவர்கள் செய்த இடைவினைகள், அங்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் சீர்திருத்தங்கள், சமூக பொருளாதார, அரசியல், கலாச்சாரம் அனைத்துமே அப்பண்பாட்டில் ஐக்கியப்பட்டு நிற்கின்றன என்பதே உண்மை.