book

ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

மருத நிலம் வாழ் மக்கள் மற்றும் நெய்தல் நிலம் வாழ் மக்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலையையும், மன உணர்வுகளையும், ஒழுக்க நெறிகளையும் எடுத்துக் கூறுவதே 'மருதமும் நெய்தலும்' என்ற இந்நூலின் நோக்கமாகும்.
மருதம், பல்பொருள் வளமையால் பெருக்கமுற்றிருந்தது போன்றே, மக்களின் வாழ்வியல் வகையாலும் பிற நிலத்து மாந்தரினும் தனித்தன்மை பெற்றிருந்தது என்பதை இந்நூலில் உள்ள மருதத்திணை பற்றிய செய்யுட்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதுபோன்றே, கடலும் கடல் சார்ந்த இடமும் என அழைக்கப் பெறும் நெய்தல் நிலம் வாழ் மீன்பிடி மக்களின் உப்பு விளைவிப்பார்களின் வாழ்வியல் முறைகளையும் ஒழுக்க நெறிகளையும் நெய்தல் திணையில் வரும் செய்யுட்களால் அறிந்து கொள்ளலாம்.
மருதத்திணைச் செய்யுட்களை ஓரம்போகியார் என்ற தமிழ்ப் புலவரும் நெய்தல் திணைச் செய்யுட்களை அம்மூவனார் என்ற தமிழ்ப் புலவரும் இயற்றியுள்ளனர். படிப்போர் மனதை ஈர்க்கும் வண்ணம் இச்செய்யுள்களுக்கு புலியூர்க் கேசிகன் அவர்கள் எளிய உரை எழுதியுள்ளார்.