
பாவேந்தரின் பாண்டியன் பரிசு
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :136
பதிப்பு :5
Published on :2010
Add to Cartபைந்தமிழின் சிறப்புகளுக்கெல்லாம் வளம் சேர்த்து வாழ்ந்து கொண்டிருப்பவை காப்பியங்கள். அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டு காப்பியங்கள் ஈடு இணையற்றவை. அவற்றுள் ஒன்றுதான் “பாண்டியன் பரிசு” என்னும் இந்தக் காப்பியம். பாண்டியன் வழங்கிய பரிசுப் பேழையை முன்வைத்து எழுதப்பட்டக் காப்பியம்.
அப்பரிசாலேயே அழைக்கப்படுகிறது. கதிர் நாட்டுக்கும் வேழ நாட்டுக்கும் பகையால் சண்டை மூழ்கிறது. கதிர் நாட்டின் அரசனும், அரசியும் அமைச்சன் நரிக்கண்ணன் என்பவனால் சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றனர்.
அவர்களுடைய மகள் அன்னம் உருமாறித் தப்பிச் செல்கிறாள். வேலனைச் சந்திக்கிறாள். வேழநாட்டு மன்னன் உண்மை உணர்கிறான். வேலனுக்குக் கதிர்நாட்டின் ஆட்சிமுடியைச் சூட்டுவதுடன் வேலனுக்கும், அன்னத்துக்கும் திருமணமும் செய்து வைத்தான். இன்பியல் காப்பியமாக இன்றமிழ் காப்பியம் அமைகிறது.
