
கண்ணாடிக் குமிழ்கள்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வளவ. துரையன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
கம்பன் தன் இராமகாதையில் நிலையாமையைக் காட்ட நீர்க்குமிழ்களை உவமையாகப் பயன்படுத்தவில்லை. மாறாக நீர்க்கோலம் எனும் சொற்றொடரைப் பயன்படுத்துகிறான். நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்து விட்டார்க்கு உயிர்கொடாது அங்குப் போகேன். என்பது கும்பகருணன் வீடணனிடம் சொல்லும் கூற்று. நீர்க்கோலமாகிய இந்த நிலையற்ற வாழ்வை விரும்பமாட்டேண் என்கிறான் கும்பகருணன். நீர்க்கோலம் என்பது நீரில் இட்ட கோலம் என்றும் நீரால் போடப்பட்ட கோலம் என்றும் பொருள் தரும். மழைநீரில் நாம் காணும் குமிழ்களும் நிலையாமையைக் காட்டுகின்றன. கண்ணாடிக் குமிழ்கள் போலிருக்கும் அவை விரைவில் உடைந்து போகின்றன. இதை உணராத பலர் எல்லா ஆட்டமும் ஆடிப் பார்க்கின்றனர்.
