book

சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொடுமுடி சண்முகம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788177351835
Add to Cart

சேது சமுத்திரத் திட்டத்தை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு 2004-ல் துவக்கியது. இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ஆரம்பத்தில் பிரச்னை கிளம்பினாலும், அதற்கு பொறுப்பான அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், திட்டம் நிறைவேறினால் போதும் என மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இறுதியில் குற்றச்சாட்டுகளால் முடக்க முடியாத இந்த திட்டத்தை மத நம்பிக்கை முட்டுக்கட்டை போட்டு நிறுத்தியது.
 
ராமேஸ்வரமும் இலங்கையும் ராமாயண காலத்தில் தொடர்பு உடையதாக பெரும்பான்மை இந்திய மக்களால் நம்பப்படுவதால், அப்போது ராமர் கட்டிய பாலம் (ராம சேது) கடலுக்கடியில் இப்போதும் உள்ளது என்றும், அதை உடைத்து சேது கால்வாய் திட்டம் உருவாக்க வேண்டாம் என்று பாஜகவின் ஆசிபெற்ற இந்துத்வா  அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டன. அதற்கு மத்திய அரசும், கடலியல் ஆய்வாளர்களும் எவ்வளவோ விளக்கம் சொல்லியும், இந்துத்துவ தலைவர்கள் கேட்பதாக இல்லை. இறுதியில் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று, மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அறிவுரையுடன், சேது கால்வாய் திட்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு,  டாக்டர் பச்சோரி தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்தது. அவர்களும் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி, மாற்று பாதை ஒன்றை சிபாரிசு செய்தனர். ஆச்சர்யமாக தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவும், ராமர் பாலத்துக்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளது.