book

உலக நீதிக் கதைகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. வேணுகோபால்
பதிப்பகம் :ஜெகநாதன் புத்தக நிலையம்
Publisher :Jeganathan Puthaka Nilayam
புத்தக வகை :நீதிகதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

ஓர் ஊரில் நல்லரசன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக்கு தகுந்தார் போல் நற்குணங்கள் பெற்றவனாக இருந்தான். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டும் குணமும் மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த மனப்பான்மை அவனிடம் இருந்தன. 

யாராவது தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்கும் துணிவும் அவனிடம் இருந்தது. அதனால், அதனால் அந்த ஊர் மக்கள் நல்லரசன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த ஊரில் வசதியாக வாழ்ந்து வந்த சிலர் நல்லரசனின் செல்வாக்கு கண்டு அவர் மீது பொறாமை கொண்டனர். 

அவர் புகழை கெடுப்பதற்கு தங்களால் முயன்ற முயற்சிகளை எல்லாம் செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியிலே முடிந்தன. பணக்காரர்கள் ஆகிய தங்கவேலும், கருப்பு சாமியும் இதனால் மனம் புழுங்கினர்.

ஏதேனும் ஒரு செயல் செய்த நல்லரசனை அவமானப்படுத்த வேண்டும் என்று துடியாய் துடித்தனர். அந்த பணக்காரர்களுக்கு நல்லரசன் எந்த தீங்குமே செய்யவில்லை. ஆனால், கோயில் திருவிழாவாக இருந்தாலும், வேறு பொது செயல்களாக இருந்தாலும் அந்த நல்ல அரசனுக்கே அனைவரும் முதல் மரியாதை கொடுத்தார்கள். இதைத்தான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.