book

ரயில் பிரயாணம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123436913
Out of Stock
Add to Alert List

சின்ன வயதில் ஸ்ரீரங்கம் போகும்போது கரி எஞ்ஜின் ரயிலில் தான் போவோம். அதுவும் பாசெஞ்ஜெர் வண்டி. ஒரு ஸ்டேஷன் விடாமல் நின்று நின்று – ஏன், யாராவது கை காண்பித்தால் கூட – நின்று ஏற்றிக்கொண்டு போகும். வெளியில் எட்டி எட்டிப்பார்த்துக் கொண்டு வருவோம். ஒவ்வொருமுறையும் கண்களில் கரி விழும். அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்வோம். ஆனாலும் அடுத்தமுறை எட்டிப் பார்ப்பது தொடரும். கண்களில் விழுந்த கரியை எப்படி எடுப்பது? அம்மா தன் புடவை தலைப்பை நாலாக மடித்து வாயில் வைத்து ஊதி, எங்கள் கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது மாதிரி வைப்பாள் – பல தடவை. இளம் சூடு கண்களில் பரவும். அப்படியும் சரியாகவில்லை என்றால் குடிப்பதற்கென்று கொண்டு வந்திருக்கும் நீரில் கண்களை அலம்பி விடுவாள். கொஞ்ச நேரத்தில் கண் சரியாகிவிடும்.

அந்தக் காலத்தில் காற்றில் அவ்வளவு மாசு தான் இருந்தது. ஆனால் இப்போது? வண்டியில் போக வேண்டாம். நடந்து போனாலே கண்களில் தூசி வந்து விழும் அபாயம் இருக்கிறது. ஒரு வண்டி நம்மைக் கடந்து சென்றால் தெருவில் கொட்டிக் கிடக்கும் அத்தனை தூசியும் மேலெழும்பி கண்களை மறைக்கும்.