book

தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி

₹408.5₹430 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா. கணபதி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1168
பதிப்பு :27
Published on :2018
Add to Cart

நான் இப்போது பௌத்த, ஜைன மதங்களை ‘க்ரிடிஸைஸ்’ பண்ணிச் சொல்கிறேனென்று உங்களுக்கு வருத்தமாயிருக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஹிஸ்டரி புஸ்தகங்களில் புத்தரையும், ஜினரையும் (மஹா வீரரையும்) பற்றி உயர்வாகப் படித்திருப்பீர்கள். அந்த அளவுக்கு உயர்வாக நம்முடைய மத புருஷர்கள் யாரைப் பற்றியாவது பாட புஸ்தகத்தில் சொல்லியிருக்குமா என்பது ஸந்தேஹம். காந்தீயம், முன்னேற்றக் கொள்கைகள் என்றெல்லாம் தற்காலத்தில் சொல்லுவதில் அஹிம்ஸை, ஸகல ஜனங்களுக்கும் வர்ணாச்ரம பேதமில்லாமல் ஸமமாக எல்லா உரிமைகளும் கொடுப்பது ஆகியவற்றுக்கு பௌத்த, ஜைன மதங்கள் இடம் கொடுத்திருப்பதாலேயே அவற்றுக்கு உயர்வு கொடுக்கப்படுகிறது. யஜ்ஞத்தில் ஹிம்ஸை இருக்கிறது, ஜனங்களைப் பிறப்பினால் பிரித்து வெவ்வேறு அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது என்பதால் ஹிந்து மதத்திடம் ஒரு குறைவான அபிப்ராயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஜன ஸமுதாயம் ஒழுங்காக வளர்வதற்குப் பல விதமான கார்யங்கள் நடக்கவேண்டியிருக்கிறது என்பதையும், ஜனங்கள் தேஹ ரீதியாகவும் மனோ ரீதியாகவும் பலதரப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனித்துத் தான் அத்தனை பேருக்கும் ஒரே போன்ற தர்மங்களை வைக்கக்கூடாது, ஒரே போன்ற அநுஷ்டானங்களையும் பணிகளையும் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் பண்ணி அவரவரும் இருக்கிற இடத்திலிருந்து மேலே போவதற்கு வசதியாக வர்ண விபாகம் (‘ஜாதிப் பிரிவினை’ என்று நடைமுறையில் சொல்லுவது) என்று நம் மதத்தில் பண்ணியிருப்பது. இது ஸமூஹ ஒழுங்கு. ஜன ஸமுதாயத்துக்குத் தேவையான அத்தனை பணிகளும் போட்டா போட்டியில்லாமல் தலைமுறை க்ரமமாகத் தட்டின்றி நடந்துவருவதற்கு ஏற்றபடி இந்த ஒழுங்கில் கார்யங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். இதே மாதிரி ஒரு தனி மநுஷ்யனுக்கும் வாழ்க்கையில் ஒழுங்கான முன்னேற்றம் ஏற்படவேண்டுமென்றே அவன் ஒவ்வொரு ஸ்டேஜாகப் பக்வமாகிக்கொண்டு போவதற்கு வசதியாக ப்ரஹ்மசர்யம், கார்ஹஸ்தயம் (இல்லறம்), வானப்ரஸ்தம், ஸந்நியாஸம் என்று ஆச்ரம விபாகம் செய்யப்பட்டது.