book

வெற்றி கலிலியோவிற்கே

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :89
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

இந்தக் கிழமை ‘ஜோசியத்தால் கெட்டேன்’ எனச் சிறைக் கொட்டிலில் இருந்து கொண்டு தலையில்  கைவைத்துப் புலம்பும் ஒரு தொழில் அதிபரின் உண்மைக் கதையை சொல்லப் போகிறேன். இதைப் படித்துவிட்டாவது சோதிடம், மாந்தீரிகம், வசியம் போன்ற மந்திர தந்திர யந்திர மூட நம்பிக்கைகளில் இருந்து இளைய தலைமுறையினராவது  விடுபடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.  தன்னம்பிக்கை இல்லாதவர்களே  எளிதில் மூடநம்பிக்கைக்கு ஆளாக விடுகிறார்கள்!

பொதுவாக மனிதர்கள் பின் வரும் வேளைகளில் சாதகத்தைத் தூக்கிக் கொண்டு சோதிடரை நாடி ஓடுகின்றார்கள்.
    1)      தொழில் தொடங்கும் போது அது வெற்றி ஆகுமா இல்லையா என்பதை முன்கூட்டி அறிந்து கொள்ள,
    2)      நோய், துன்பம், இழப்பு, இடர் வந்து சூளும் போது பரிகாரம் என்ன என்பதைக் கேடடறிந்து கொள்ள,
    3)      திருமணப் பேச்சின் போது பொருத்தம் பார்க்க.