அறிவியல் என்பது நம் அனைவரது வாழ்விலும் பின்னிப்பிணைந்துள்ள ஒன்றாகி விட்டது. எனவே,அன்றாட வாழ்வில் கலந்துள்ள அறிவியல் கருத்துகளை அனைவரும் பெற வேண்டியது அவசியமாகும்.இதனைக் கருத்தில் கொண்டு நாட்டுடைமை யாக்கப்பட்ட 'இளையர் களஞ்சியம் என்னும் நூலை எங்களது பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடுகின்றோம். கருத்துகள் எளிதில் மனத்தில் பதியவும்,மேலும் விளக்கமுறவும் படங்கள் ஆங்காங்கே இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவை முன்னைய பதிப்பிலிருந்து மாறுப்பட்டவை. புதிதாக எங்களால் சேர்க்கப்பட்டுள்ளன