பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலைவராக நியமித்து, சிறு வழக்குகளை விசாரித்து, தீர்ப்புக்க கூறக் செய்தார்கள்.பிறகு, தினசரி மாஜிஸ்டிரேட்டுகளை நியமித்தனர், அவையும் ரத்து செய்யப்பட்டன. வழக்குகள்,பெரும்பாலும் ஒரு மாத்த்திற்குள் முடித்து விடும். செலவு குறைவு, பொதுமக்களுக்குச் சிரமம் இல்லை. இப்பொழுது வழக்குகள் பெருகி விட்டன! வழக்கறிஞர்கள் அதிகரித்து விட்டன, பல ஆண்டுகள் ஆகின்றன. இவற்றை உத்தேசித்து, கிராமங்கள் தோறும், ''நியாயப் பஞ்சாயத்துக்கள்'' ஏற்படுத்தி வழக்குகளைக் கீழ்மட்டத்திலே விரைவில் முடித்துவிட வேண்டும் என்று இந்திய சட்டக் குழு அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. அது நிறைவேறினால் போதுமக்களுக்கு நன்மை ஏற்படும்.