ஆரம்பப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் என்னுடைய பள்ளிக்கு வந்த போது அங்கு நடைப்பெற்ற பேச்சு போட்டியில் எனக்கு சான்றிதழ் வழங்கினார். ஆண்டு முதல் பேச்சுக் கலையின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்தபோது திராவிட முன்னேற்ற கழகத்தின் மாணவர் அணியில் பொறுப்பு வகித்தப்போது பல்வேறு பட்டிமன்றங்களில் பங்கேற்று பேசிய அனுபவம் உண்டு. அத்துடன் வழக்கறிஞராக பொறுப்பேற்ற உடன் எனது பேச்சுக்கலையுடன், எழுத்துக்கலையும் கூடுதலாக சேர்ந்து செம்மைப்படுத்தியது.