அப்போதே சொன்னேன், கவனமிருக்கிற தல்லவா? அந்தப் பயல் உருப்படமாட்டான் என்று தெரிந்து சொன்னேன். விளையும் பயிர் முளையிலே என்று பெரியவர்கள் வீணுக்கா சொல்லி வைத்தார்கள் என்று ஒவ்வொரு நாளும் நடைபெறும் குளத்தங்கரை மாநாட்டில்,கொத்தனார் வேலையிலிருந்து வளர்ந்து காண்ட்ராக்டர் ஆகிவிட்ட குத்தால்லிங்கம் அன்று கூறிவிட்டு ,உடன் இருந்தவர்களைக் கெம்பீரமாகப் பார்த்தார்.