அண்ணா ஒரு நாடக அறிஞர். அவர் கலை நயமும் கருத்து வளமும் உலக நாடக இலக்கிய ஆசிரியர் வரிசையில் வைத்தெண்ணத்தகும் சீரும் சிறப்பும் உடையவர். அறிஞர் அண்ணா அவர் காலத்தின் குரலாகவும் நிழலாகவும் விளங்கினார். அவர் ஒரு பல்கலைவாணர் பல்கலைச் செல்வர். மக்களை முன்னேற்றவும், சீர்திருத்தவும் நாடகக் கலையை சீர்தூக்குவியவர், மோலியர், இப்சன், பெர்னாட்சா, மாக்சிம் கோர்க்கி, ஆண்டன் செகாவ் போல இந்திய நாட்டின் வேறு எந்த மொழியினரைக் காட்டிலும் நன்கு பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா