திராவிட இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்த பூமான் சர்.தியாகராயர் தோன்றித் திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை பூண்டு, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத் தனத்தை அகள்ளப் பாடுபட்டுச் சமுதாயத் துறை, பொருளாதாரத் துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற்றிட உழைத்தார்.
நம்முடைய அடிப்படைக் கட்டடம் பலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அல்லும் பகலும் பாடுபட்டார். இன்று நாம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு மூலகாரணம் யார்?
நம் தியாகராயர்! திராவிட இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்த பூமான் அவர்!