கல்விதான் மனித நாகரிகத்தின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. அதுதான் மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்தி அறிவுப்பூர்வமாக வாழக் கற்றுக் கொடுக்கிறது. தரமான கல்வியைத் தரமான முறையில் மக்கள் அனைவர்க்கும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைந்தவைதாம் பல்கலைக் கழகங்கள். அவைதாம் மாணவர்கள் படித்துப் பட்டம் பெறும் வாய்ப்பை வழங்குகின்றன. அந்த நிலையில் அமைந்த பல்கலைக் கழகங்களுள் ஒன்றுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.