The People of the Indus and the birth of civilization in South Asia புள்ளி விவரங்கள், கண்டுபிடிப்புகள் என ஒரு சரித்திர பாடப்புத்தகமல்ல இது. தோன்றியது எப்படி எனவும், மறைந்தது எப்படி எனவும் தெரியாத. காணமல் போன ஒரு நாகரிகத்தின் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆதாரங்களுடன் சித்திரப் படங்களாக திரைப்படம் போல இந்த நூல் தருகிறது. குழந்தைகளும், பெரியவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒரு எளிமையான புத்தகம். தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் முறை! சிந்துவெளி மக்கள் கி.மு.3200 ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளி நாகரிகம் இருந்ததாக கருதப்படுகிறது. ஒரு மிக முன்னேறிய சிந்துவெளி நாகரிகம். தோன்றியது எப்படி, மறைந்தது எதனால்? என விளக்கும் இந்த நூல் அந்த நாகரி கத்தின் குடிமக்களைப் பற்றியது. சிந்துவெளி மக்கள் எப்படி வாழ்ந்தார்கள். என்னென்ன செய்தார்கள். வாழ்கை முறை எப்படி இருந்தது? தன்னுடைய மூலாதாரத்தின் தேடலின் விளைவே இதுபோன்ற அகழ்வாய்வுகள் சிந்துவெளி நாகரிகம் "திராவிட நாகரிகம் " என்ற ஒரு ஆய்வும் இன்று நடைபெறுகிறது. இந்த வரலாற்றை ஆய்வு செய்து, இன்றைய இளைஞர்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் அருமையான சித்திரக் கதை வடிவில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.