1968ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணியில் 1500க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் 1200 சிறுகதைகளை எழுதி கின்னஸ் சாதனை படைக்கிறார். அறிவியல் ஆசிரியராய் இருந்து, எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர், க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெற்றவர் ராஜேஷ்குமார். விஞ்ஞான நாவல்களை எழுதி படிப்போரின் புருவங்களை உயர வைத்தவர். குடும்ப நாவல்களையும் சமூக நாவல்களையும் எழுதியதின் மூலம் அதிகமான பெண் வாசகிகளைப் பெற்றவர்.
தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதுக்கும் தேசிய அளவிலான அரிமா சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கும் சொந்தக்காரர். மதுரை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக் கழக பி.எச்.டி. மாணவர்கள் இவருடைய நாவல்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். ஆங்கிலம், ஹிந்தி உள்பட தென்னக மொழிகளில் பல லட்சம் பேர் இவருடைய நாவல்களை இன்னமும் தினந்தோறும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவருடைய "இருட்டுக்கு இரண்டு நிறம், ஜன்னல் நிலா!(இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)"என்ற இந்த புத்தகம் இப்போது உங்கள் கைகளில்,