book

ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 1

Onnarai Pakka Naaledu

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் ஒரே மாநிலம், ஆறு லட்சம் மிஜோக்களுக்கும் ஒரே மாநிலம் என்பது அநியாயம் இல்லையா! இதைக் கண்டு நீ பொங்கிட மாட்டாயா? நீ வீறு கொண்டெழுந்தால் அதை இந்த நாடு தாங்குமா? இல்லை நானிலம்தான் தாங்குமா? இதை எப்படி சரி செய்வது என்று நாலைந்து மாதமாக தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் அறிவை கூர் தீட்டுவதற்காக தேசத் தந்தை காந்தியார் போல உண்ணாவிரதமும் கொள்ள உறுதி பூண்டேன். உற்றார் உறவினர் அரற்றினர்; இந்த வயதில் நீங்கள் உங்கள் உடலை வருத்திக் கொள்ளலாமா என்று கண்ணீர் விட்டுக் கதறினர். உனக்குத்தான் தெரியுமே? நாட்டுக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன் என்று! நேற்று இரவு எட்டு மணிக்கு உணவு உண்ட பிறகு இன்று காலை ஆறு மணி வரை எதுவுமே சாப்பிடவில்லை. பத்து மணி நேரம்! அறுநூறு நீண்ட நிமிடங்கள்! என் உடன்பிறப்பின் குறை தீர்க்க வழி ஒன்று என் விழியிலே புலப்படும் வரையில் என் உடலையே அழித்திடவும் தயாராக இருந்தேன். களைப்பிலே சற்று கண்ணயர்ந்தேன்.