அபலையின் கண்ணீர்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
அமரர் கல்கி எழுதிய பிரபலமான குருநாவல்களுள் ஒன்று 'அபலையின் கண்ணீர்.'
எனக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிகம் உண்டு என்பது நேயர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். உதாரணமாக, எனக்குப் பெயர் வைத்து நாற்பது வருஷத்துக்கு மேல் ஆயிற்று. ஆயினும் என்னுடைய பெயரை இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேன்! என்னுடைய இளம் நண்பர் ஒருவர் எட்டு வருஷத்துக்கு முன்னால் பழக்கமானார். இரண்டாவது தடவை அவரைச் சந்தித்தபோது, "என்ன மிஸ்டர் துரைசாமி! சௌக்கியந்தானே?" என்று கேட்டேன். "சௌக்கியந்தான். ஆனால் என் பெயர் துரைசாமி இல்லை; முத்துசாமி!" என்று அவர் சொன்னார். அப்புறம் நூறு தடவைக்கு மேல் என்னுடைய ஞாபகத்தை அவர் மாற்ற முயன்றும் பயன்பட வில்லை. கடைசியில் அந்த மனிதர், "முத்துசாமி" என்று பெயர் எழுதிய அவருடைய பௌண்டன் பேனாவை என்னிடம் ஞாபகர்த்தமாகக் கொடுத்து விட்டுப் போன பிறகுதான் பழைய, "துரைசாமி" என்ற பெயரால் அவரை அழைப்பதை நிறுத்தினேன்.
இவ்வளவு அபாரசக்தி உள்ள என்னிடம் சென்ற வாரத்தில் ஒரு மனிதர் திடீரென வந்து, "என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டார்.
அதற்குத் திட்டமான பதில் எதுவும் சொல்லாமல் ஒரு மாதிரி புன்னகை புரிய ஆரம்பித்தேன்.
அந்த மனிதர் உரத்த சத்தம் போட்டு, "என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன்" என்றார்.
அதற்கு மேல் ஞாபக சக்தியோடு செவியின் சக்தியும் போய்விடப் போகிறது என்று பயந்து, "தெரிகிறது" என்றேன்.
"என் பெயர் என்ன?" என்று கேட்டுவிட்டு அவர் புன்னகை புரிந்தார்.
"முகம் தெரிகிறது; ஆனால், பெயர்தான் கொஞ்சம் மறந்து போயிருக்கிறது! என்று தடுமாறினேன்.
"சரியாய்ப் போச்சு! நான்தான் தேசத் தொண்டன் குமாரலிங்கம்; இப்போது தெரிகிறதா?" என்று கேட்டார்.
என் தலை சுழலத் தொடங்கியது.
"அதாவது தமிழ் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குமாரலிங்கங்களில் நானும் ஒருவன்" என்றார்.
போன உயிர் திரும்பி வந்தது.
"ரொம்ப சந்தோஷம்!" என்றேன்.