book

இசைபட வாழ்தல்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராமலிங்கம் ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :89
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல்' என்று மணக்குடவர் இப்பகுதிக்கு உரை கூறினார். இவ்விதம் மாற்றி உரை செய்தது புகழுக்கு சிறப்பு கூறுவதற்குப் பதிலாக ஈகைக்குக் கூறுவதாக அமைகின்றது. பரிதி 'கொடுப்பதும் புகழுடன் வாழ்வதும்' என இரண்டையும் கூட்டி உரை கண்டார். காலிங்கரும் பரிமேலழகரும் 'ஈதல் பயக்கும் புகழ்' பற்றிக் கூறுகின்றனர்; இவர்களது உரையே பொருத்தமானது.

இன்றைய ஆசிரியர்கள் 'வறியார்க்கு ஈக; புகழோடு வாழ்க', 'ஏழைகளுக்கு வழங்குக. புகழ் பெற வாழ்க', 'ஏழைகளுக்குத் தானம் கொடுப்பதையும் அதனால் புகழப்பட்டு வாழ்வதையும்', 'வறியவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்க வேண்டும்; அதனால் புகழ் உண்டாகும்படி வாழவேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வறியார்க்குக் கொடுத்தல், புகழோடு வாழ்தல் என்பது இப்பகுதியின் பொருள்.