செவ்வாழை
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்
Out of StockAdd to Alert List
செங்கோடன் அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப்பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன் பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்து விட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சிப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான் தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான்.அவ்வளவு புரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல்மண்ணைக் கிளறிவிடும் போதும்,அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால் கரியனிடம் -அவனுடைய முதல் பையன் காட்டியதை விட அதிகமான அன்பும், அக்கரையும் காட்டுகிறாரே என்று ஆச்சரியம்,சற்றுப் பொறாமை கூட ஏற்பட்டது.குப்பிக்கு.