book

தோன்றியதென் சிந்தைக்கே (சிந்தித்தது, சந்தித்தது, படித்தது, பார்த்தது, ரசித்தது)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

வாழ்க்கை எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் தன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறது. கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பவனுக்குப் புல் கூடப் போதி மரமாகி விடுகிறது. நாம் கண்களையும் காதுகளையும் திறந்துை வக்கத் தெரிந்திருந்தால் நம் புலன்களுக்கு இதுவரை தட்டுப்படாத காட்சிகளும், ஓசைகளும் கேட்கத் தொடங்கிவிடும். நம் ஒவ்வொரு நொடியும் உன்னதமானது. உலகத்திலேயே அரிய சொத்து நேரம் மட்டுமே.சேர்த்து வைக்கமுடியாத சொத்து நேரம். ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சில சிந்தனைகள் சிறகடிப்பதுண்டு. அவற்றையும் 'சிந்தித்தவை' எனப் பதிவுசெய்யலாம் எனத் தோன்றியது. கதம்பம் போல 'சிந்தித்தவை, சந்தித்தவை, படித்தவை, பார்த்தவை, ரசித்தவை' என்று வாரந்தோறும் தொடராக எழுதியபோது எனக்கே அது சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. வாசிக்க எளிமையாக இருக்கும் இந்நூல் ஒரு தேநீர் மேசைப் புத்தகம்' மட்டுமே என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.