book

தமிழர்க்குப் பெருமை சேர்த்த தமிழர் எஸ்.ஆர். நாதன்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. ஸ்டாலின் குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123432984
Add to Cart

    1924ம் ஆண்டு செல்லப்பன் - அபிராமி தம்பதிக்கு நாதன் பிறந்தார். அவருடன் சேர்ந்து வீட்டில் நான்கு குழந்தைகள். அப்போது சிங்கப்பூர் மலேசியாவுடன்தான் இருந்தது. குடும்பத்தில் கஷ்ட ஜீவனம்தான்.   அப்போது சிங்கப்பூரின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவராக எஸ்.ஆர். நாதன் இருந்தார். பணயக்கைதிகளை மீட்கும் இந்த நடவடிக்கைக்கு எஸ்.ஆர். நாதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 7 நாட்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ''தங்களை பாதுகாப்பாக குவைத் செல்ல அனுமதித்தால் பணயக் கைதிகளை விடுவிப்பதாக தீவிரவாதிகள் உறுதியளித்தனர்.'' தொடர்ந்து ''பணயக் கைதிகளை விடுவித்து விடுங்கள். நீங்கள் குவைத் செல்ல நான்  பணயக் கைதியாக உங்களுடன் வருகிறேன்'' என எஸ்.ஆர். நாதன் கூறினார். அதனடிப்படையில்  பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

உறுதியளித்தபடி, எஸ்.ஆர் நாதன் உட்பட 13 அதிகாரிகள் பணயக் கைதியாகி 1974ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி தீவிரவாதிகளுடன் விமானத்தில்  குவைத் நோக்கி பயணித்தனர். அடுத்த நாள் தாயகம் திரும்பிய போது, சிங்கப்பூரே திரண்டு அவருக்கு வரவேற்பளித்தது. 'என்னை விட என் தேசம்தான் எனக்கு முக்கியம் ''  எஸ்.ஆர். நாதன் அடிக்கடி உதிர்க்கும்  வார்த்தை. சொன்னதைப் போலவே தன்  தேசத்து மக்களுக்காக தனது உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தவர்தான் எஸ்.ஆர். நாதன். ஒரு உயிரிழப்புக் கூட இல்லாமல், இந்த நடவடிக்கையை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டினார் எஸ்.ஆர். நாதன்.