book

நாயன்மார் வரலாறு

₹265+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திரு.வி. கலியாணசுந்தரனார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :325
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430003
Out of Stock
Add to Alert List

நாயன்மார்கள் என்பவர் சிவனடியார்கள்; சிவத்தொண்டே உயிர்நாதம் என வாழ்ந்தவர்கள். அவர்கள் வரலாறு எவ்விதம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது என்று பார்ப்போம்.

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருடைய பேரருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பியின் மூலமாக, இராசராசசோழன் தேவாரத் திருமுறைகள் தில்லைப் பொன்னம்பலத்தின் அருகே தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் இலச்சினையுள்ள அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்ததை அறிந்தான்.

தில்லை வாழ் அந்தணர்களின் வேண்டுகோளின்படி, தேவார ஆசிரியர் மூவர் திரு உருவங்களுக்கும் வழிபாடு செய்து தில்லைத் திருவீதிகளில் எழுந்தருளச் செய்து, பூட்டப்பட்ட அறையைத் திறந்து பார்த்த போது பெரும்பாலான ஏடுகள் செல்லரித்துக் கிடந்ததை கண்டு மனம் வருந்தினான் மன்னன்.

“இக்காலத்துக்கு வேண்டிய தேவாரப் பதிகங்களைத் தவிர மற்றவற்றை செல்லரிக்கச் செய்தோம்” என்ற அருள் வாக்கினால் மனம் தேறிய மன்னன், நம்பியாண்டார் நம்பியிடம் எஞ்சியுள்ள திருப்பதிகங்களை தொகுத்து தருமாறு வேண்டினான்.

நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவார திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடியருளிய திருப்பதிகங்களை அடுத்த மூன்று திருமுறைகளாகவும் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களை ஏழாம் திருமுறையாகவும், மாணிக்க வாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம், திருக்கோவையார் எனும் இரு நூல்களை எட்டாம் திருமுறையாகவும் தொகுத்தார்.

திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா பதிகங்கள் 28 மற்றும் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பதிகம் ஆகிய 29 பதிகங்களை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமந்திரப் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும்  தொகுத்தார்.

திருமுகப் பாசுரம், காரைக்கால் அம்மையாரின் திருப்பதிகங்கள் ஆகிய பிரபந்தங்களையும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய 89 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி முதலிய 1400 பதிகங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் தொகுத்துக் கொடுத்தார்.

பின்னர் சேக்கிழார் பாடிய திருத் தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் பன்னிரெண்டாம் திருமுறையாக ஏற்கப்பட்டது.