உலக புத்தக தினம். ஆகவே ஏதாவது புத்தகம் வாங்க வேண்டுமென்று
நினைத்திருந்தேன். தி மு க அரசு இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவு தெரிவித்து
பந்த் அறிவித்திருந்தார்கள். ஆகவே எங்கும் வெளியில் செல்ல இயலவில்லை.
சித்திரை மாத வெப்பம் வெளியில் தலை காட்ட விடவில்லை.
சரி, ஏதாவது
புத்தகம் படிக்கலாம் என்றால் ஒரே குழப்பம். படிக்க வேண்டிய புத்தகங்கள்
என்னுடைய அலமாரியில் 109 இருந்தது. கதையோ, கட்டுரையோ படிப்பதைக் காட்டிலும்
பல ஆளுமைகளைப் பற்றிய புத்தகமாக படிக்கலாமென்று முடிவு செய்து அலமாரியைத்
துழாவினேன்.