அன்றொருநாள் மகள் கேட்கிறாள், யாரையாவது ப்ரியப் பட்டிருக்கிங்களாப்பா ன்னு. புதைத்த இடத்தில் பூமுளைத்து,
அவை இரண்டோ மூன்றோ தலைமுறைக் கண்டிருக்கும். ஒரு மரணம் தாண்டிய
வலிப் பூக்களின் வாசனையால் கூட என்னை இப்படி வெட்கப்படவைக்க முடியுமா
யோசிக்கிறேன். துளிக் கண்ணீர். ஏக்கம் கலந்த ஒரு மெளனப் பெருமூச்சு.
சிந்தனைச் சாய்தல் என எதுவுமே அற்றாதக் கேள்வி அது.
கடினம் காணாத, கனம் கோர்த்த அந்த வார்த்தைகள் இனி தொடரும் முன்பே சுதாரித்துக் கொண்டேன்.