ஆரம்பம்: பிஸினஸ் உலகை தன் திறமையால் பல வருடங்கள் கலக்கிக் கொண்டிருக்கும்
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, சாட்சாத் தமிழ்ப் பெண். அதுவும் சென்னையைச்
சேர்ந்தவர். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பும்,
ஐ.ஐ.எம். கொல்கத்தாவில் எம்.பி.ஏ. படிப்பும், யேல் பல்கலைக்கழகத்தில்
முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.போராட்டம் 1976ல் ஒரு டெக்ஸ்டைல்
நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் சில நிறுவனங்களில் பணி
புரிந்தார். ஆனால் அது அவருக்கு முழு திருப்தியைத் தரவில்லை. அதன்பின்னர்,
பெப்ஸி நிறுவனத்தில் வைஸ் ப்ரெசிடென்டாக பணியில் சேர்ந்த இந்திரா இன்று அதே
நிறுவனத்தில் சேர்மன் மற்றும் சி.இ.ஓ.வாக உயர்ந்துள்ளார்.அடையாளம்:
பெப்ஸி விற்பனையில் இந்தியாவானது உலகளவில் முதல் ஐந்தாவது இடத்தில்
இருந்தது. தனது அயராது உழைப்பால் பெப்ஸி நிறுவனத்தை உலகில் இரண்டாவது
இடத்திற்கு கொண்டு வந்தார்.தனித்துவம்: முக்கியமான பதவியில்
இருந்தாலும், உலகப் புகழ் பெற்றாலும் எளிமையாகவே இருப்பவர். எப்போதும்
வெறும் வியாபார நோக்குடன் இல்லாமல் தான் வாழும் சுற்றுப்புறத்தைப் பற்றி
யோசித்துச் செயல்படுபவர், சமூக ஆர்வலரும் கூட!