மனிதர்களே சிறந்த புத்தகங்கள். எல்லாவிதமான படிப்பினைகளையும் தர
வல்லவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள். காயம் தருகிறவர்களாகவும், மருந்து
இடுகிறவர்களாகவும் மனிதர்களே இருக்கிறார்கள். மகிழ்ச்சியையும் துயரத்தையும்
மனிதர்கள்தான் தருகிறார்கள். நாம் சோர்ந்து சரியும்போது, தாங்கள் கடந்து
வந்த பாதைகள் மூலமாகவும் தங்களின் வெற்றிகள் மூலமாகவும் நமக்கு உற்சாகம்
தருகிறவர்களாக இருப்பதே ஒத்தையடிப் பாதை மனிதர்களின் தனிச்சிறப்பு. யாரோ
போட்டு வைத்த பாதையில் பயணம் செய்யாமல் தங்களின் பாதைகளைத் தாங்களே
தீர்மானித்துக்கொண்ட சாதனையாளர்கள் இந்நூலின் இடம்பெற்றுள்ளனர். உழைத்துச்
சேர்த்த வெற்றியின் ரகசியங்களை, பிறருக்குப் பயன்படவேண்டும் என்கிற
பெருந்தன்மையோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.