மயூரிக்கு என்ன பிரச்சினை என்றாலும் குணசீலன் உடனேயே வந்து தீர்த்து வைத்து விடுவான் .அல்லது அவள் மனத்தை மாற்றும் விதமாக தேறுதல் சொல்லிவிட்டாவது போவான். பல வருடங்களாகவே நிச்சயித்திருந்த மணமகன் அபூர்வன் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் வேறொருத்தியை திருமணம் செய்து கொண்ட போது மயூரி மிகவும் உடைந்து போனாள். அப்போதும் குணசீலன் தான் கை கொடுத்தான். அவனுக்கு அவள் மீது கோபமே வராதா ?