இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் காதல் இருந்தது. தமிழர்களின் வாழ்க்கையில் காதலும் போருமாகத் தான் கழிந்தது. அந்தக் காதல் இப்போது இரண்டாயிரம் மடங்கு பெருகி விட்டது. அங்கு இங்கு எனாதபடி எங்கும் காதல் தென்றல் வீசுகிறது. காதல் என்பது தென்றலா? புயலா? சுனாமியா? நாளிதழ்களைப் பார்க்கும்போது இந்தக் கேள்வி என்னுள் எழும். காதல் கொலைகள், காதல் தற் கொலைகள், காதலால் வீட்டை விட்டு ஓடிய காளைகள், கன்னிகள் பற்றிய செய்திகள் பக்கம் பக்கமாக இருக்கும். காதல் என்பது தமிழ் சமுதாயத் தில் ஒரு கொள்ளை நோய் போல ஆகிவிட்டது. இந்தக் கதையில் மூன்று காதல் ஜோடிகள் வருகிறார்கள். வருத்திக் கொண்டார்களே தவிர, பெற்றோரையோ மற்றவர்களையோ காயப்படுத்த வில்லை. இறுதியில் கதை சுபமாக முடிகிறது. இந்த முடிவு ஒரு பட்டிமன்றத்துக்கு ஏற்றது!