எனக்குக் கிடைத்த கதைகள் வரை வரை ஒவ்வொன்றையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. மனசு விரக்தியடைந்து வெறுமையாகத் தோன்றும் போதும், எரிச்சல் ஏற்படும் போதோ, மனசு பாரமாகி கண்ணில் நீர் எட்டிப் பார்க்கின்ற நிலை ஏற்படுகிற போதோ ஏதாவது ஒரு கதையை எடுத்துப் படிப்பேன். அவை எனக்கு அமைதி தரும் மருந்தாகவும், அறிவுரை வழங்கும் ஆசானாகவும் செயல்படுகிறது.