'' திரைவானில் கலைஞர்'' என்ற இந்த நூல் கல்லூரி மாணவர்களுக்குப் பாடப் புத்தகமாக வைக்கப்படக்கூடிய அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. திரைப்பட நுழைவு, திரைக்கதைத் தேர்வு, தலைப்புப் பொருத்தம், திரைக்கதை வசன ஆசிரியர், பாடலாசிரியர், பின்னைப் புதுமை, சமூக மறுமலர்ச்சி, கன்னித்தமிழ் காத்த கலைஞர் என பல்வேறு தலைப்புகளாகப் பிரித்து ஆய்வு செய்திருக்கிறார். பேரா. சுலோச்சனா அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்.
கலைஞர் அவர்கள் தம் இளம் வயதில் 'மாணவநேசன்' தனிச்சுற்று இதழை தொடங்கியதிலிருந்து தனது தள்ளாத வயதிலும் தளராது ஆற்றிய எழுத்துப் பணியை குறிப்பாக திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை எடுத்தியம்புகிறது இந்த நூல்.