இந்த நூல் மூலமாக, முத்தமிழறிஞர் கலைஞரின் படைப்பை இரண்டாம் முறையாக
வெளியிடும் பெரும்பேறு எங்கள் பதிப்பகத்திற்குக் கிடைத்துள்ளது. தமிழ்ப்
பதிப்புலக வரலாற்றில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கலைஞரின் 'கவிதை
மழை'யை வெளியிட்ட எங்கள் பதிப்பகம், இப்போது 'கல்வி நிலையங்களில் கலைஞர்'
என்கிற இந்த வரலாற்றுப் பெட்டகத்தைப் பெருமையோடு வெளியிடுகிறது. இந்த
நல்வாய்ப்பு அமையக் காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர், முத்தமிழறிஞர்
தலைவர் கலைஞர். அவர்களுக்கு எங்களது நன்றி. நூல் முழுவடிவம் பெறக்காரணமாக
இருந்தவர் மூத்த பத்திரிகையாளரும் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு
வழிகாட்டுபவருமான அய்யா சின்னக்குத்தூசி அவர்கள். அவரது வாழ்த்துகளாலும்
ஊக்கத்தாலும் இந்த நூல் சிறப்பான முறையிலே வெளிவந்திருக்கிறது.