மதம் என்றும் மார்க்கம் என்றும் சொல்லப்படும் விஷயத்துக்கு பல வண்ணங்களுண்டு. பல சமயங்களில் அது வெறியூட்டியுள்ளது. சில சமயங்களில் அது நெறியூட்டியுள்ளது. ஆனால் அதற்கெல்லாம் காரணம் மதத்தின் உள்ளே உள்ள கருத்தல்ல. மதத்திற்கு வெளியே உள்ள புறக்காரணிகள்தான். நாம் எதை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் இங்கே முக்கியமானது.