கமலாவும் ,கருப்பனும் காதலர்கள்? ஆனால் வெவ்வேறு ஜாதி, என்றாலும்,இரண்டு பேரும் ஒருவரையொருவர் கலியாணம் செய்து கொள்குகிற அளவுக்கு காதல் கொண்டிருந்தார்கள். ஆனால் கமலாவின் அப்பா, ஜாதி மாறி கலியாணம் செய்து கொடுக்க விரும்பவில்லை.சொந்தக்காரரும்,பணக்கார்ருமான பாக்கியநாதனுக்குத் திருமணம் செய்துதர ஏற்பாடு செய்திருந்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கருப்பன்,உண்மைதான என்று கேட்க கமலாவிடம் போயிருக்கிறான்.இந்த உலகத்தில், ஏழைகளுக்கும் காதலுக்கும் எட்டாத்தூரம் உண்டு போலிருக்கிறது. கமலம் கடிதத்தில் தன் முடிவைத் தெரிவித்திருக்கிறான். முடிவைக் கண்ட கருப்பன் மூர்க்கனாகி இருக்கிறான் -கோபத்துக்கு ஆளாகி,காதலியும் தன்னைப் புறக்கணிப்பதாக எண்ணி இந்தக் கோர கொலையைச் செய்திருக்கிறான்.