இந்த நூலில் உள்ள கட்டுரைகள் எல்லாம் உரைநடைக் குறள் போன்றவை. சிறிய வடிவில் பெரிய கருத்துகளைச் சொல்ல கவிஞர் தியாரூவால் முடிந்திருக்கிறது. கட்டுரைகளில் சில வரிகள் படித்த பிறகு நம்மை அங்கேயே நிறுத்தி நெடுநேரம் சிந்திக்க வைக்கின்றன. வலியப் புகுத்தாமல் இயல்பாக எழும் நகைச்சுவை சில இடங்களைக் கலகலப்பாக்குகிறது. அப்படிப்பட்ட இடங்களைப் படிக்கும்போது நம் உதடுகளில் மெல்லிய முறுவல் வந்து ஒட்டிக் கொள்கிறது. பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கிய இந்த நூல், படிப்பவர்களின் மனத்தை மேம்படுத்தும். எந்த நூல் படிப்பவர்களின் மனத்தைச் சிறிதளவேனும் உயர்த்துகிறதோ அந்த நூல் நல்ல நூல்தானே?
- முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்