வாழ்க்கை வசப்படவும் அது வசந்தமாகவும் என் இனிய நண்பர் வாழ்வியல் சிந்தனையாளர் கவிஞர் தியாரூ அவர்கள் பல்வேறு அனுபவங்களையும். செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் அருமையான நூல்தான் இந்த 'வாழ்வெல்லாம் வசந்தம்.' இந்நூலின் 188 பக்கங்களை வாசித்து முடிக்கிறபோதே நமக்கு வசந்தகாலம் தொடங்கிவிட்டதாக உணர்வோம்.
கவிஞர் தியாரூ அவர்களின் "வாழ்வெல்லாம் வசந்தம்' என்ற இந்நூலின் வாசிப்பு. நம்மை வாழ்க்கையை நேசிக்க வைக்கும், 'வாழ்வதொன்றும் அத்தனைப் பெரிய விஷயமல்ல. எளிது' என்பதை இதமாகச் சொல்கிற அவரது எளிமையான நடை பெரிதும் பாராட்டிற்குரியது.
- கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்