சுமார் ஓர் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையே இப்புத்தகம். இப்பொழுதே பல எலக்ட்ரானிக் கருவிகளும் மொபைல் போன்களும் நம் வாழ்வில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டன. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவை எல்லாம் பழையனவாகி வேறு பல புதிய கருவிகளும் நுணுக்கங்களும் தோன்றும். ஒரு கதாசிரியன், தன் படைப்புக்கள் வரிசையாகத் தோல்வி அடைந்தால் எப்படி வேதனையடைவான் என்பதையும் அழகாக விளக்குகிறது இந்தப் புத்தகம். பரத்வாஜனுக்கு எல்லாம் இருக்கிறது- பேர், புகழ், பணம், அழகான குடும்பம்- எல்லாம் இருக்கிறது. ஆனால் அவன் எழுதிய நாவல்கள் பிரபலமடையாமல் அடுத்தடுத்து தோல்வி அடையவே, அவன் மிகவும் நொந்து போகிறான்.