இந்த கதை மூன்று அத்தியாயங்களாக தொடரும். கதாயாகன் ஆப்கன் நாட்டில் நுழைவதிலிருந்து கதை தொடரும்.ஹீரோ அங்கே எதற்காக போக வேண்டி வந்தது என்பது இரண்டாவது அத்தியாயம். மூன்றாவது அத்தியாயத்துடன் கதை முடியும். நாவலின் தொடக்கத்திற்கு இவ்வளவு விவரங்கள் எதற்கு என்றால்... முதல் அத்தியாயம் முழுவதும் தாலிபான்களின் வரலாறு, ஆப்கன் நாட்டின் புவியியல் தோற்றம் பற்றிய விவரங்கள் இருக்கும். கதையில் மட்டுமே ஆர்வம் கொண்டவர்களுக்கு இது சலிப்பு தரலாம். இது நாவலா வரலாற்றுப் பாடமா? என்ற சந்தேகமும் வரலாம். அப்படிப் பட்டவர்கள் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து படிப்பது நல்லது.